கரிகால் சோழன்



கரிகால் சோழன்

இளஞ்செட்சென்னியின் வாரிசு. இளம்வயதில் ஏற்பட்ட தீக்காயத்தினால், கரிகாலன் என்றழைக்கப்பட்டான். (யானைகளின் எமன் என்றும் இப்பெயருக்கு விளக்கம் தரப்படுகிறது.) திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்ற பட்டப்பெயர்களும் உண்டு. சிறந்த வீரன். இமயம் வரை சென்றுவந்த மன்னன்.





அனைத்திற்கும் மேலாய் நமக்குக் கல்லணை தந்த மாமனிதன். வாழ்க மன்னன் புகழ்!



உலக அதிசயங்களில் நமக்குள் மாற்றுக் கருத்து உண்டு. கல்லணை தமிழக அதிசயம் என்றால், எவரும் முரண்படார்!




கல்லணை, இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அற்புதம். மாமன்னன் கரிகால் பெருவளத்தான் தமிழகத்திற்குத் தந்த கொடை. தொன்மை வாய்ந்த இவ்வணை, இன்றளவிலும் பாசனத்திற்குத் துணைபுரிகிறது. பட்டினப்பாலை , பொருநர் ஆற்றுப்படைப் பாடல்கள் கரிகாலனின் கல்லணைச் சிறப்புகளைப் பேசுகின்றன.


மணலால் அடித்தளம் அமைக்கப்பெற்றுக் கட்டப்பட்ட கல்லணை, இன்றைய தொழில்நுட்பங்கள் யாவற்றுக்கும் முன்னோடி. 1900 ஆண்டுகளாய்க் காவிரியைக் கட்டுப்படுத்தி வரும் கல்லணைக்கான கட்டுமானப் பொருட்களாவன: கல், களிமண்!


சர்.ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர், கல்லணையை மகத்தான அணை என்றழைத்தார். கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம், 40 முதல் 60 அடி. ஆழம், 15 முதல் 18 அடி. 1839 ஆம் ஆண்டு, அணையின் மீது பாலம் கட்டப்பட்டது
thanks to http://enthamizh.blogspot.com/2009/01/blog-post_7144.html

நரைமுடி தரித்து நீதி வழங்கல்
பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் இன்றும் கூட நீதிபதிகள் நரைமுடி தரித்துத் தான் நீதி வழங்குகின்றனர். இந்த வழக்கத்தைக் கரிகால் சோழன் தான் துவக்கி வைத்தான் போலும். சோழ மன்னரின் தலைநகராக விளங்கிய உறையூரில் இருந்த அறங்கூறு அவையம் மிகவும் புகழ் பெற்றது.

ஒருநாள் இரு முதியவர்கள் நீதி வேண்டிச் சோழனின் அரசவைக்கு வந்தனர். ஆனால் வழக்கைக் கேட்கவுள்ள கரிகாலனின் இளம் வயதைக் கண்டு இவரால் சரியான தீர்ப்புக் கூற முடியாதென எண்ணித் தயங்கினர். அவர்களுடய ஏமாற்றத்தை உணர்ந்த கரிகால் சோழன் அவர்களை மறுநாள் வரும்படிக் கூறி, அன்று ஒரு முதியவர் அவைநீதி வழங்குவார் என்றும் சொன்னான்.

மறு நாள் அவர்கள் அவைக்கு வந்த பொழுது கரிகாலனே நரைமுடி தரித்து முதியோர் போல வேடம் அணிந்து வந்து தீர்ப்புக் கூறினான். முதியோர் இருவரும் அந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இச் செய்தியைப் பொருநராற்றுப் படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.
thanks to http://unarvukal.com/index.php?showtopic=4637

சுமார் (கி.மு. 273-232) ஆம் ஆண்டு அசோகச் சக்கரவர்த்தியால் நிறுவப்பட்ட அசோக ஸ்தூபியில் அசோகச் சக்கரவர்த்திக்கும் சோழர்களுக்கும் இடையே உள்ள நட்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதி ரோமாபுர சாம்ராஜ்ஜியத்திற்கும், சோழ சாம்ராஜ்ஜியத்திற்கும் வர்த்தக தொடர்பு இருந்துள்ளதை Periplus of the Erytharean Sea (கி.பி. 81-96) குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் சோழ சாம்ராஜ்ஜியம் கி.மு. 300 முதல் கி.பி. 200 வரை ஆட்சி புரிந்ததை அறிந்து கொள்ளலாம்.

சோழர்களுடைய சாதனையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட ‘கல்லணை’ குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கரிகால் சோழனைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.

புறநானூற்றில் 224-வது பாடலில், கரிகால் சோழனின் இறப்பு பெரும் வருத்தத்திற்கு உரியதாக கூறியிருக்கிறது.

இதே பாடலில் வட்ட வடிவ கோட்டைச் சுவர்களையும், நெடுந் தூண்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கரிகால் சோழனின் அரைவட்ட வடிவ கோட்டைச் சுவரின் வர்ணனையையும் ராமநாத ஈஸ்வரன் கோயில் கருவறை சுவரையும் ஒப்பிட்டு பார்க்கையில், இரண்டும் ஒரே காலகட்டத்தை சார்ந்தது எனக் கூறலாம்.
போரூரைச் சார்ந்த உத்தர ராமேஸ்வரம் எனும் ஸ்ரீ ராமநாத ஈஸ்வரர் ஆலயம் 2230 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக தெரிய வருகிறது. அதாவது கரிகால் சோழனின் காலத்திற்கு உரியது.

இக்கோயிலில் இன்னும் சில கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சமீப காலத்தில் கட்டப்பட்ட மண்டபத்திற்கு அடியில் பல பெரிய கல்வெட்டுகள் புதைக்கப்பட்டுவிட்டன என்கிற செய்தி மிகவும் வருந்தத்தக்கதாகும். மீதம் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்களை ஆதாரப்பூர்வமாக அறிய முடியும்.
thanks to http://uthararameshwaram.org/history.htm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து
கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி.

கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
பொருளடக்கம்
1 வெண்ணிப்போர்
2 புராணக்கதைகள்
3 சமயம் இறப்பு
4 இவற்றையும் பார்க்கவும்
5 குறிப்புகள்
//

[தொகு] வெண்ணிப்போர்
இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

[தொகு] புராணக்கதைகள்
பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

[தொகு] சமயம் இறப்பு
வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது.



[தொகு] குறிப்புகள் [பட்டினப்பாலை]
"வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்துபீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழிகொன்று யானை பிடிபுக்காங்கு" (பட்டினப்பாலை 220 – 228)

"நுண்ணுதி னுணர நாடி நண்ணார்செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்துருகெழ தாப மூழி னெய்திப்பெற்றவை மகிழ்தல் செய்வான்" (பட்டினப்பாலை 220 – 228)

சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன்  ---முஇளங்கோவன்

தமிழக அரசர்களின் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணைபுகின்றன.சங்க நூல்களில் மூவேந்தர்கள் பற்றியும் (சேரர்கள்20, சோழர்கள் 18,பாண்டியர்கள் 14) குறுநில மன்னர்கள், படைத்தலைவர்கள் (ஏறத்தாழ 150 பேர்) பற்றியும் அயல் நிலங்களில் வாழ்ந்த அரசர்கள் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன (மேற்கோள்,சங்க கால மன்னர்களின் காலநிலை, தொகுதி1,ப.1). புலவர்கள் அகத்துறை, புறத்துறை சார்ந்த பாடல்களை இயற்றும்பொழுது உவமை வழியாகவும்,சில புலவர்கள் நேரடியாகவும் பண்டைத் தமிழக அரசர்கள் பற்றியும்,பிற தேயத்து அரசர்கள் பற்றியும் குறிப்புகளைத் தந்துள்ளனர்.இவ்வாறு குறிப்புகள் காணப்பட்டாலும் இன்னாருக்குப் பின்னர் இன்னார் அரசாண்டார்கள் என்று உறுதிபடக் கூறுவதற்குச் சான்றுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு காணப்படும் சான்றுகளைக் கொண்டு முடிந்த முடிபாக வரலாற்றைப் பதிய முடியாமல் அறிஞருலகம் கருத்துவேறுபட்டு நிற்கின்றது.அவ்வகையில் கரிகாற் சோழன் வரலாறும் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

கரிகாலன் தந்தை

கரிகாலன் வரலாற்றை ஆராய்வதற்கு நமக்குப் புறநானூறு,அகநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை,சிலப்பதிகாரம்,மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் பெருந்துணைபுரிகின்றன. இவற்றுள் பொருநராற்றுப்படையில் இடம்பெறும் அரசன் கரிகாலன் எனவும் பட்டினப் பாலையில் இடம்பெறும் அரசன் திருமாவளவன் எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இவ்வாறு குறிப்பிடப்படும் இருவரும் ஒருவரா,வேறானவர்களா எனவும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.மயிலை சீனி.வேங்கடசாமி,தி.வை.சதாசிவ பண்டாரத்தார், புலவர் கோவிந்தன்,அறிஞர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்களின் கருத்தை எடுத்துரைத்துக் கரிகாலன் வரலாற்றை இக்கட்டுரை ஆராய முனைகிறது.

கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்"(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.

முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்

"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"

என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.

கலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.

கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.

கரிகாலன் காலத்தில் சோழநாட்டுக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்துள்ளன.உறையூரைத் தலைநகராகக்கொண்டு தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அரசாண்டான். கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டு கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அரசாண்டான்.இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தான். உடன் பிறப்பு இவனுக்கு இல்லை. இரும்பிடர்த்தலையார் என்ற புலவரால் வளர்க்கப் பெற்றவன். பொருநராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் இவன்.இவன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும்.கழுமலத்திலிருந்து பின்னாளில் நெய்தலங்கானல் தலைநகரானது. நெய்தலங்கானல் என்பது இன்று பூம்புகாருக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் நெய்தல்வாசல் எனப்படுகிறது.

திருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான்.பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான்.திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான்.நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளிசேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான்.பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான்.காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12).பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும்.அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.

திருமாவளவனின் காலத்தில் தொண்டைநாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான்.திருமாவளவனின் மகன் செங்கணான் ஆவான். இவன் காலத்தில் சேரநாட்டை ஆண்டவன் கணைக்கால் இரும்பொறை.சோழநாட்டின் மேல் படையெடுத்துத் தோற்றவன். செங்கணானின் படை வலிமை பற்றி குறிப்பிடும் அயல்நாட்டுப் பயணியான பிளைனி,"இந்த நாட்டில் மற்றொரு நகரமும் இருக்கிறது.அதன் பெயர் கதுமுலா என்பதாகும்.அந்நகரம் கடற்கரையில் உள்ள பட்டினமாக விளங்குவதோடு,பல நாட்டு மக்கள் வணிகம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது.மற்றும்,ஐந்து நதிகள் ஒன்றுகூடிக் கடலில் விழும் இடத்தில் உள்ளது.அதன் அரசினிடம் வலிமை வாய்ந்த 1600 யானைப் படைகள் உள்ளன.150 ஆயிரம் காலாட்படைகளும்,5000 குதிரைகளும் உள்ளன" என்று குறிப்பிடும் பிளைனியின் காலம் கி.பி.23-79 ஆகும்.இங்குக் குறிப்பிடப்படும் கதுமலா என்பது கழுமலமாகிய சீர்காழியைக் குறிக்கும்.

வலிமை வாய்ந்த படையுடைய செங்கணானுடன் கழுமலம் என்ற ஊரில் கணைக்கால் இரும்பொறை பொருது தோற்றவன்.

கோப்பெருஞ்சோழனுக்கு இரு மகன் இருந்தனர்.மூத்தவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்;இளையவன் இளஞ்சேட் சென்னி.

காரவேலன் கி.மு 165 இல் படையெடுத்து வந்தான்.11 ஆண்டுகள் படைதிரட்டித் தமிழகத்தை நோக்கி வந்தான். திருக்கோவிலூருக்கு அருகில் காரவேலன் படையும்,குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் படையும் பொருதன.திருமுடிக்காரியின் முள்ளூர்மலையில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒளிந்தான்.உறையூர் காரவேலன் வசமானது.அங்கிருந்து பெரும்படையுடன் மதுரைக்கு வந்தான்.

காரவேலன் படை மதுரை சென்று திரும்பியபொழுது சோழர் படைதிருப்பித் தாக்கக் காரவேலன் படை தோற்றது.காரவேலன் படையினர் தோற்றதுடன் பாழி என்ற ஊரில் வீரர்கள் சிலர் ஒளிந்துகொண்டனர்."குடித்தம் ஆதலின் பாழி" என்னும் குறிப்பு இதனை உறுதிப் படுத்தும்.

உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.எனவே தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி என்ற தொடர் உறுதிப்படுத்தும்.கரிகாலன் பொறுப்பில் வடுகர் நாடு ஆளப்பட்டது.இவன் ஆணை பெற்று இரேணாட்டுச்சோழர்கள் ஆட்சி செய்தனர். இரேணாட்டுச் சோழர்கள் என்பவர்கள் கரிகாலன் மரபினர் என்பர்.

கரிகாலனின் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆவான். இவன் கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டவன்.இவன் காலத்தில் சேரநாட்டில் உதியஞ்சேரலும், அந்துவஞ்சேரலும் ஆட்சிபுரிந்துள்ளனர்.மேலும் பாண்டியநாட்டில் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆட்சி செய்தவன்.வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியுள்ளார். உறையூரிலிருந்து ஆட்சி செய்தவன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியாவான்.உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.கரிகாலனின் காலம் புலவர் மாமூலனார் காலமான கி.மு.325- கி.மு.278 ஆகும்.இவன் மீது சேரன் பெருஞ்சேரலாதனும் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் பதினொரு வேளிரும் கூடிப் படையெடுத்தனர். வெண்ணியில் போர் நடந்தது.சேரன் புறப்புண் நாணி உயிர்விட்டான். பாண்டியன் கொல்லப்பட்டான்.

கரிகாலனைப் பாண்டிய நாட்டுக் கருங்குளவாதனார் பாடியுள்ளார்.அவர் பிறந்த கருங்குளம், "கரிகால சோழ நல்லூரான கருங்குளம்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.எனவே கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் கரிகாலனுக்கு உரிமையுடையதாக இருந்தது.

கரிகாலனுக்கு ஆண் வாரிசில்லை.ஒரே மகள் ஆதி மந்தி ஆட்டனத்தியை மணந்தாள்.எனவே கரிகாலனுக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் போனது என்று அறிஞர் பே.க.வேலாயுதம் குறிப்பர்(சங்க கால மன்னர் வரிசை)

கரிகாலனைப் பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறார்.

வென்ற வேலினையும்,அழகிய தேர்களையும் உடைய இளஞ்சேட்சென்னியின் மகன் எனவும் முருகனது சீற்றத்தைப் போலச் சீற்றத்தையும்,பகைவருக்கு அச்சத்தையும் தரும் தலைவன் கரிகாலன்.தாயின் வயிற்றிலிருக்கும்பொழுதே அரச உரிமையைப் பெற்றவன்.தன் பகைவர்கள் தன் வலியறிந்து ஏவல் செய்யவும்,அவ்வாறு ஏவல் செய்ய மறுத்த பகைவர்களின் நாடுகள் கவலைகொள்ளவும் அரசாட்சி செய்தவன்.கடல்மேல் தோன்றும் கதிரவன்ஒளிவீசியவாறு விண்ணில் உலா வருவது போல் பிறந்த நாள்தொட்டு தம் ஆட்சியைச் சிறப்புறச்செய்தவன். யாளியின் குட்டி,பால் உண்டலை மறவாத இளம் பருவத்திலேயே ஆண் யானையைக் கொன்றதுபோல்,பனம்பூவை அணிந்த சேரனையும்,வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனையும் வெண்ணிப் போரில் வென்றவன்,ஆத்திமாலை அணிந்தவன்,கரிகால் பெயருடையவன் என்று குறிப்பிடுகிறது.

"வென் வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,

ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்"(பொருநர்.129-148)

என்னும் பாடலடிகள் கரிகாலனின் வரலாறு உணர்த்துகின்றன.

கரிகாலன் பற்றி மாமூலனார்(கி.மு.325-250) பாடிய அகநானூற்றுப்பாடலில்

"கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென" (அகம் 55,9-13)

(ஒளிபொருந்திய படையுடைய கரிகாலனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டபோது புறப்புண்ணிற்குப் பெரிதும் நாணிய சேரலாதன் தான் தோல்வியடைந்த போர்க்களத்திலேயே வாள்ஏந்திய கையுடன் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தான் என்ற குறிப்பு காணப்படுகிறது). எனவே கரிகாலனின் வெண்ணிப்போர் பற்றி அறியமுடிகிறது.

கரிகாலன் பற்றி பரணர்(கி.மு.325-கி.மு.250) கூறும் கருத்துகள்

கரிகாலன் பற்றி பரணர் அகநானூற்றில் பல குறிப்புகளைத் தருகின்றார்.

"விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர்" (அகம்,125,16-21)

விரிந்த தலையாட்டம் கொண்ட விரைவாக ஓடும் குதிரைப்படையுடன் கூடிய பகைவருக்கு அச்சம் தரும் பெரிய வாளுடைய கரிகால் வளவன் முன்பாக நிற்க ஆற்றல் அற்றவரகளாக வாகைப்பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வெற்றிபெற, அவனை எதிர்த்தொன்பது மன்னர்களும் ஒன்பது குடைகளைப் பகற்பொழுதில் விட்டுவிட்டுச் சென்றனர்.

அகநானூற்றின் (246)பாடலில் மேலும் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

"காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே" (அகம்.246,9-14)

சினமும் பேராற்றலும்,பெரும் புகழும் வாய்த்த கரிகால் வளவன் வெண்ணிவாயில் என்னும் இடத்தில் பகையரசர்களை அவர்களின் பேரொலி எழுப்பும் வீரமுரசு போர்க்களத்தே கிடக்க, வேளிர் பதினொருவர்,இருபெரு வேந்தர்களை நிலைகெட்டுப் போகும்படி அவர்களின் படையாற்றலை அழித்தான்.அந்த நாளில் அவனின் தாய் பிறந்த அழுந்தூரில் மகிழ்ச்சி ஆர்ப்பு எழுந்தது.

கரிகாலன் கழார் என்னும் ஊரில் பெரிய சுற்றத்துடன் இருந்து புனலாட்டைக் கண்டு மகிழ்ந்த பொழுது,சிறந்த வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் காலில் புரள,கரிய கச்சணிந்து அடிவயிற்றில் மணியும் கட்டிக்கொண்டு, கஞ்சத்தாளம் ஒலிக்கப் புனலாடலை விரும்பி ஆடும் ஆட்டனத்தியின் அழகை விரும்பிக் காவிரியாறு அவனைக் கவர்ந்துகொண்டது.ஆட்டனத்தி ஆதி மந்தியின் கணவன் ஆவான்.கணவனை இழந்த பிறகு ஆதிமந்தியுடன் வாரிசு இல்லாமல் கரிகாலனின் ஆட்சிக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் ஆகியிருக்கும்.
இதனை,

"கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தௌ¤ர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு"(அகம்.376)

என்னும் பாடலால் அறியலாம்.

கரிகாலன் பற்றி கழாத்தலையார் பாடியது

"உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்"(புறம்.65)
சேரமான் பெருஞ்சேரலாதான் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தி இப்பாடலில் பதிவாகியுள்ளது.

கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் பாடியது


"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?"(புறம் 66)

கரிகாலனைப் பழந்தமிழ் நூல்கள் பாடியுள்ளதுடன் பிற்கால நூல்களும் பாடியுள்ளன.அவற்றுள் விக்கிரமசோழன் உலா,குலோத்துங்க சோழன் உலா,குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட நூல்களில் வரும் குறிப்புகள் சிறப்பாகச் சுட்டத்தக்கன.

"தெள்ளருவிச்
சென்னிப் புலியேறு இருத்திக் கிரிதிரித்துப்
பொன்னி கரை கண்ட பூபதி" விக்கிரம சோழன் உலா

"தலையேறு
மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்" -குலோத்துங்க சோழன் உலா

முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை
முகில்தொட அமைத்தது அறிவோம்
இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறித்த வட
இமகிரி திரித்தது அறிவோம்"- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

"தொழுது மன்னரே கரைசெய் பொன்னி"
- கலிங்கத்துப் பரணி

"செண்டுகொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச்
சிமயமால்வரை திரித்து அருளி,மீள அதனைப்
பண்டு நின்றபடி நிற்க இது'என்று முதுவில்
பாய்புலிக் குறிபொறித்து அது மறித்த பொழுதே"- கலிங்கத்துப் பரணி

"தத்துநீர் வரால் குறிமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு அறுநூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்"-கலிங்கத்துப்பரணி

பிற்கால நூல்களும் உரையாசிரியர்களும் கரிகாலனையும் திருமாவளவனையும் ஒன்றாகவே கருதும் போக்கைக் காணமுடிகிறது.அதுபோல் இருவரின் போர்வெற்றி,சிறப்புகளையும் மயங்கியே கூறுகின்றன.
 

No comments: